ஸ்பெயினில் காளைகள் திருவிழா உற்சாகத்துடன் கோலாகலமாக தொடங்கியது - காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
Jul 9 2014 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில், காளைகள் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், முதல் நாளன்று நடைபெற்ற ஓட்டத்தில், எதிர்பாராத வகையில் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில், காளைகள் ஓடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். சாதாரணமாக, வாகனங்கள் அதிகம் இயங்கும் சாலைப்பகுதிகள், இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றைய தினம் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இந்த திருவிழாவில், போட்டி நடைபெறும் ஊரிலிருந்து மட்டுமல்லாமல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு காளை திருவிழா, பாம்லோனா நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளன்று, ஏராளமான காளைகள் தெருக்களில் அவிழ்ந்துவிடப்பட்டிருந்தன. இந்த காளைகளுடன், பொதுமக்களும் வேகமாக ஓடிச் செல்லும் வகையில் இந்தப் போட்டி அமைக்கப்பட்டிருந்தது. காளையுடன் ஓடுபவர்களும், உற்சாகமாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். ஸ்பெயின் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் காளை ஓட்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவதும், இதில், இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, காளைகளுடன் ஓடுவதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு நிமிடம் 25 நொடிகளில் 5 காளைகள், போட்டி நிறைவுபெறும் மைதானம் வரை ஓடிச் சென்று பார்வையளர்களை அசத்தின. இந்த போட்டியில், 4 பேர் பலத்த காயம் அடைந்து, அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.