ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ள கருத்துக்கணிப்பையொட்டி தீவிரப் பிரச்சாரம் - பல்வேறு கட்சிகள் பங்கேற்பு
Sep 13 2014 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்காட்லாந்து சுயாட்சி தொடர்பாக, மக்களிடையே கருத்துக்கணிப்பு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பிரிட்டனில் ஒரு பகுதியாக இருந்து வரும் ஸ்காட்லாந்தை, தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதேசமயம், ஸ்காட்லாந்து தொடர்ந்து பிரிட்டனின் ஒரு அங்கமாக நீடிக்க வேண்டும் என்றும் மக்களில் ஒருபிரிவினர் கருதுகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், ஸ்காட்லாந்து பிரிவினை ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஸ்காட்லாந்து பிரிவினை எதிர்ப்பாளர்களின் கையே ஓங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.