நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற தக்காளி திருவிழா : நூற்றுக்கணக்கானோர் ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசியெறிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்
Sep 16 2014 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமில் நடைபெற்ற தக்காளி திருவிழாவில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, ஒருவர் மீது ஒருவர், தக்காளியை வீசியெறிந்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
நெதர்லாந்திலிருந்து தக்காளி இறக்குமதியை ரஷ்யா நிறுத்திக்கொண்டதால், நெதர்லாந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களின் மன உளைச்சலை போக்கவும், ஓரளவு வருவாயை ஈட்டித்தரவும் அம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பிரதான சதுக்கத்தில் தக்காளி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர், ஒருவர் மீது ஒருவர் தக்காளி வீசியெறிந்து மகிழ்ந்தனர். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் கிலோ தக்காளி பயன்படுத்தப்பட்டது. இந்த விழாவில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தொகை, தக்காளி விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், விழாவில் பயன்படுத்தப்பட்ட தக்காளிகள், இயற்கை எரிவாயு தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் என்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.