ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வெளிநாட்டு ராணுவத்தினரின் பேண்ட் இசை நிகழ்ச்சி : பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பு
Sep 2 2013 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பல்வேறு நாடுகளின் ராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் பங்கேற்று இசைக்கருவிகளை இசைத்த நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்தது.
மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில், ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளின் ராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இசைக்கருவிகளுடன் பங்கேற்கும் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. 8 நாட்கள் நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பில் இந்த ஆண்டு 13 நாடுகளின் ராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு முன்னர் நடைபெற்ற பேண்ட் வாத்தியக் குழுவினரின் ஒத்திகையை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வழக்கமாக அணிவகுப்பு பயிற்சியின்போதோ அல்லது முக்கிய பிரமுகர்கள் மறைவின்போதோ பேண்ட் வாத்தியங்களை இசைக்கும் ராணுவக் குழுவினர், இதுபோன்று ஆண்டுதோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது புத்துணர்வை ஏற்படுத்தும் என விழா நிர்வாகி தெரிவித்தார்.