தான் நினைத்தால், இரண்டே வாரத்தில் உக்ரைன் நாட்டை கைப்பற்ற முடியும் - ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்ததாக வெளியான தகவல்களால் பரபரப்பு
Sep 2 2014 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டை, தான் நினைத்தால், இரண்டே வாரத்தில் கைப்பற்ற முடியும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேன்வேல் பொராசோ, அண்மையில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, தான் நினைத்தால் உக்ரைனை இரண்டே வாரத்தில் கைப்பற்ற முடியும் என புதின் குறிப்பிட்டதாக தெரிகிறது. இந்த தகவலை, நேட்டோ நாடுகளின் மாநாட்டில் ஜோஸ் மேன்வேல் பொராசோ தெரிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைன் பகுதியில் பரபரப்பு அதிகரித்துள்ளதால், அவசரகால நடவடிக்கையாக 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட அதிரடிப் படை ஒன்றை நேட்டோ தயார் நிலையில் வைத்துள்ளது.