பிலிப்பைன்ஸ் நாட்டில் சொகுசு படகு கடலில் மூழ்கி 2 பேர் பலி : காணாமல்போன 29 பேரை தேடும் பணி தீவிரம்

Sep 16 2014 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டில் சொகுசு படகு கடலில் மூழ்கி 2 பேர் பலியாயினர். காணாமல்போன 29 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடான பிலிப்பைன்ஸில், படகு மற்றும் சொகுசு கப்பல் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தநிலையில், லெய்ட் மாகாணத்தில் உள்ள லிலோன் துறைமுகத்தில் இருந்து ஒரு சொகுசு படகு புறப்பட்டுச் சென்றது. இதில் மொத்தம் 84 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 58 பேர் பயணிகள், 26 பேர் படகு ஊழியர்கள் ஆவர். இப்படகு பனயான் தீவின் வடமேற்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலோர மீட்பு படையினர் 3 படகுகளில் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சொகுசு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாயினர். பலர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன 29 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கடலில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கடலில் மிக உயரமான அலைகள் எழும்பியதன் காரணமாக, படகு மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிலிப்பைன்ஸ் படகு போக்குவரத்தில் போதுமான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதன்காரணமாக இதுபோன்ற விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00