பாகிஸ்தானில் நன்கொடையாளர்கள் நடத்திய இஃப்தார் விருந்து : பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு உணவருந்திச் சென்றனர்

Jul 22 2014 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் நன்கொடையாளர்கள் நடத்திய இஃப்தார் விருந்தில், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு, உணவருந்திச் சென்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகர வீதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி, நோன்பு இருக்கும் பொதுமக்களுக்கு இந்த இஃப்தார் விருந்து வழங்கப்படும். இதில் பெருந்திரளான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அறக்கட்டளைகள், பெரும் செல்வந்தர்களிடம் இருந்து நிதியுதவி பெற்று, இஃப்தார் விருந்தை கோலாகலமாக நடத்தினர். வழக்கமாக ரம்ஜான் மாதத்தில் நோன்பு திறக்கும்போது நடைபெறும் இஃப்தார் விருந்து, இம்முறை ஏழை, எளிய மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

ஒரே நேரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி உட்கார்ந்து உணவருந்தினர். இதேபோன்று இஃப்தார் விருந்து, கராச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. இதில் ஏழை மக்கள், பயணம் மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் உணவருந்தி சென்றனர். தற்போதைய காலகட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இதுபோன்ற விருந்துகளில் ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பங்குகொண்டு வருகின்றனர். அத்துடன் வேலையில்லா நிலைமையும் பெருமளவில் அதிகரித்திருப்பதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00