கொரிய போரின் 60-ம் ஆண்டு நினைவு அணிவகுப்பு திருவிழா : வடகொரியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Jul 23 2013 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியா நாட்டில், அரிரங் என்னும் பெயரில் கடந்த 2002ம் ஆண்டு முதல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இதனையொட்டி, வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மே தின மைதானத்தில் கண்கவரும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வடகொரியாவை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் இளம்பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, இசைக்கேற்க ஒரே மாதிரி நடனமாடியும், ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் செய்தும், நடனமாடியபடியே பல்வேறு உருவத் தோற்றங்களையும் அமைத்து காட்டினர். இதேபோன்று, சிறுவர் சிறுமிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் அசத்தினர். மேலும், பல்வேறு வண்ணங்களுடைய பட்டாசுகளும் வானத்தில் வெடித்து சிதறி வண்ண ஜாலங்கள் நிகழ்த்தின. கண்கவரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.