மாயமான மலேசிய விமானத்தைத் தேடி ஆழ்கடலுக்கு, ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் - ஆஸ்திரேலியா அரசு நடவடிக்கை
Apr 14 2014 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாயமான மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடி ஆழ்கடலுக்கு, ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
239 பயணிகளுடன் இந்திய பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஏற்கெனவே 11 ராணுவ விமானங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், விமானத்தை தீவிரவாதிகள் அஃப்கனிஸ்தான் எல்லைக்கு கடத்திச் சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேடுதல் பணி ஓய்வின்றி நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி சமிக்ஞைகள் அனுப்புவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் ஆழ்பகுதியில் கருப்புப் பெட்டியைத் தேடி ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், புளூஃபின் - 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலுடன், ஒலி வடிவில் உண்டாகும் சமிக்ஞைகளை ஆதாரமாகக் கொண்டு தேடும் சோனார் கருவியுடன் விரைவில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் செலுத்தப்படவுள்ளது.