ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மெக்ஸிகோ சிட்டி - அனைத்துக் கட்டடங்களும் வண்ண விளக்குகள் சூடிய வர்ணஜாலம்
Nov 9 2013 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டி ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. அனைத்துக் கட்டடங்களும் வண்ண விளக்குகள் சூடி வர்ணஜாலம் பொழிகின்றன.
மெக்ஸிகோ நாட்டின் கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும்மேலாக, மெக்ஸிகோ சிட்டியில் விளக்குத் திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மையக்கருத்தை முன்வைத்து இந்த விளக்குத் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க முரலிசம் கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் வகையில், 80 கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த விளக்குத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர். மெக்ஸிகோ சிட்டியில் அமைந்துள்ள கரிபால்டி ப்ளாசா, ப்ளாசா டி ல கான்சிடா உள்ளிட்ட வரலாற்று பெருமை வாய்ந்த கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. மின்னணு விளக்குகள் வர்ணஜாலம் பொழிகின்றன. நாளை வரை நடைபெறவுள்ள விளக்குத் திருவிழாவை, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியிடங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் வந்து கண்டுகளிக்கின்றனர்.