ஹைத்தியில் வருடாந்திர மலர் திருவிழா : ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டம்
Jul 31 2014 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைத்தியில் வருடாந்திர மலர் திருவிழா, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களில் அந்நாட்டு அதிபர், மைக்கேல் மார்டில்லியும் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு வருடமும் ஹைத்தியில் கொண்டாடப்படும் மலர் திருவிழா, இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறு அன்று துவங்கிய இந்த விழாவால், போர்-அவு-பிரின்ஸ் நகர வீதிகள் களைக்கட்டியுள்ளன. கால்களில் கட்டைகளை கட்டிக் கொண்டு நடனம் ஆடுவது, மேளத்தாளங்களுடன் நடனம் ஆடுவது என வண்ணவண்ண உடை அணிந்த பல்லாயிரம் மக்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக ஹைத்தியில் நடைபெற்று வரும் மலர் திருவிழா அந்நாடு முழுவதும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு விழாவிற்கு அரசாங்கம் தேவையில்லாமல் பணம் செலவழிப்பதாக ஹைத்தி மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், மலர் திருவிழாவை பார்ப்பதற்காகவே பல ஊர்களில் இருந்தும் போர்-அவு-பிரின்ஸ் நகரில் மக்கள் குவிந்துள்ளனர். அந்நாட்டின் அதிபர் மைக்கேல் மார்டில்லியும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதனால், ஹைத்தி நாடு முழுவதும் உற்சாகமாக காணப்படுகிறது.