அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நேரிட்ட காட்டுத் தீ - ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் எரியும் தீயைக் கட்டுப்படுத்த போராட்டம்
Sep 13 2014 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நேரிட்ட வன தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
குடியிருப்புப் பகுதியின் அருகே ஏற்பட்ட இந்த காட்டுத் தீ காரணமாக 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்ட நிலையில், ஒரே நாளில் ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு தீயால் கருகியது. தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டிருப்பதோடு, ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலிஃபோர்னியா பகுதியில் கடும் வறட்சி நிலவுவதோடு, வெப்ப நிலையும் அதிகரித்திருப்பதால், தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.