அமெரிக்காவின் பல இடங்கள் அடர்ந்த உறைப்பனியினால் சூழப்பட்டுள்ளது - பனிச்சூறாவளி காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Apr 17 2014 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் பனிக்காலம் நீடித்து வரும் நிலையில், பல இடங்கள் அடர்ந்த உறைப்பனியினால் சூழப்பட்டுள்ளன. பனிச்சூறாவளி காற்றும் அவ்வப்பொழுது வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனிக்காலத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல மாகாணங்கள் அடர்ந்த உறைப்பனியினால் சூழப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பனிக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. Detroit, Michigan, Tennessee, Alabama உள்ளிட்ட பல இடங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில இடங்களில் மழையுடன் பனிச்சூறாவளியும் வீசி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.