மத்திய ஆப்ரிக்க நாட்டில் கடும் உணவு தட்டுப்பாடு - ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பசியால் வாடும் பரிதாபம்
Apr 18 2014 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்க நாட்டில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் பசியால் வாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய ஆப்ரிக்க நாட்டில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த பிரெஞ்ச் நாட்டுப் படைகள் முகாமிட்டுள்ளன. இதனிடையே, வைரச் சுரங்கங்கள் நிறைந்த Boda என்ற நகரில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் கருப்பின முஸ்லிம்கள் உணவுக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப்படையினர் விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் தாங்கள் சிறையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஊட்டச் சத்து இல்லாமல் ஏராளமான குழந்தைகள் மரணத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர்.