193 நாடுகளின் பெயர், தலைநகரங்களை சொல்லி அசத்தல் : உலக சாதனை படைத்த யு.கே.ஜி சிறுவனுக்கு பாராட்டு
Dec 29 2019 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேசிய கொடிகளை காண்பித்தால் 193 நாடுகளின் பெயர் மற்றும் தலைநகரங்களை சொல்லி அசத்திய யு.கே.ஜி சிறுவனுக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள இணைய உலக சாதனை நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் புதுச்சேரியை சேர்ந்த ஹரி சரண் என்ற 5 வயது சிறுவன் கலந்து கொண்டான். கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள 193 உலக நாடுகளின் தேசிய கொடிகளை சுட்டிகாட்டியுள்ளார். மேலும் அவை எந்த நாட்டிற்கான கொடி என்று கேட்டால் வரிசையாக உலக நாடுகளின் பெயரையும் அதன் தலைநகரங்களை சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளான். இதேபோன்று ஸ்ரீ வைஸ்னவி என்ற மாணவி 6.58 நிமிடத்தில் ராஜாகபுடாசனம் செய்து சாதனை படைத்தார். தொடர்ந்து ஹரிஹரன், ஸ்ரீவைஸ்னவி இருவருக்கும் ஆன்லைன் வேல்டு ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.