"வரும் டி20 உலகக் கோப்பையில் கோலி விளையாடினாலும் ஆச்சர்யமில்லை" தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து
Jan 12 2024 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், இத்தனை மாதங்களாக டி20 அணியில் விளையாடி வந்த இளம் வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போகும் என்ற விமர்சனத்தைப் புரிந்துகொள்ள முடிவதாகவும், அனுபவமிக்க விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் எனவும் தெரிவித்தார்.