தயான் சந்த் விருது பெற்ற தமிழக கபடி வீராங்கனை தமிழகம் திரும்பிய கவிதா செல்வராஜுக்கு உற்சாக வரவேற்பு
Jan 11 2024 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தயான் சந்த் விருது பெற்ற தமிழக கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டட விளையாட்டு வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்து. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியரசு தலைவர் கையால் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியதை பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார்.