சங்கரன்கோவிலில் ஸ்கேட்டிங்கில் 4 வயது மாணவன் சாதனை முயற்சி : பல்வேறு தரப்பினர் பாராட்டு
Nov 24 2019 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், 4 வயது பள்ளி மாணவன், ஸ்கேட்டிங்கில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சங்கரன்கோவில் வடக்குப்புதூரில் ஸ்கேட்டிங் கழகம் உள்ளிட்டவை சார்பில் நடைபெற்ற ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில், சங்கரன்கோவிலை சேர்ந்த சவரத் தொழிலாளி கோட்டியப்பன் - பாண்டீஸ்வரி தம்பதியின் மகன் அஜய் பங்கேற்றான். அரசு மருத்துவமனை முன்பு தொடங்கி, சண்முகநல்லூர் வரையுள்ள 7 கிலோ மீட்டர் தூரத்தை, 29 நிமிடங்களில் கடந்து அஜித் சாதனை படைத்தான். மாணவனின் இந்த சாதனை முயற்சியை பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.