இந்தியா - பங்களாதேஷ் இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : 106 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி
Nov 22 2019 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி ஆட்டமிழந்தது. வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஷசினா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பெல் அடித்து தொடங்கி வைத்தனர்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்து முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி, இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 30 புள்ளி 3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் இழந்தது. இந்திய அணி தரப்பில், இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளும், உமேஷ் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.