இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : அதிக பார்வையாளர்கள் போட்டியை பார்வையிட முடியும் - சைலஜா
Nov 22 2019 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு ஆட்டமாக டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், அதிக பார்வையாளர்கள் போட்டியை கண்டுகளிக்க முடியும் தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை என சைலஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. இந்த போட்டிக்கு பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை சைலஜா, நமது செய்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு ஆட்டமாக டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் அதிக பார்வையாளர்கள் போட்டியை பார்க்க முடியும் என தெரிவித்தார். பிங்க் நிற பந்தை பயன்படுத்துவதால் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் எனவும், பேட்ஸ்மேன்களின் திறன் வெளிப்பட இது ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.