2-வது T-20 போட்டியில் பங்களாதேஷுக்கு இந்தியா பதிலடி - கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி
Nov 8 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2-வது T20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில், டெல்லியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில், பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது T20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில், பேட்டிங் செய்த பங்களாதேஷ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா- சிகர் தவான் கூட்டணி வலுவான துவக்கம் தந்தது. குறிப்பாக, கேப்டன் ரோகித் சர்மா, அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். இறுதியில், 15-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் இந்திய அணி, வெற்றி இலக்கை எட்டியது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், கடைசிபோட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.