இந்தியா - பங்களாதேஷ் இடையிலான முதல் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டி - டெல்லியில் இன்றிரவு தொடக்கம்
Nov 3 2019 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி, டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 3 டி20, 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்படி, இந்தியா - பங்களாதேஷ் இடையிலான முதல் சர்வதேச டி 20 போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில், கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், துணைக் கேப்டன் ரோகித் சர்மா தலைமை பொறுப்பேற்று அணியை வழிநடத்த உள்ளார். இந்திய அணியில், ரோகித், ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். மேலும், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ராகுல் சஹார் உள்ளிட்ட இளம் வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை, கேப்டன் ஷகிப் ஹல் ஹசான் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.