பி.சி.சி.ஐ. தலைவராக சவ்ரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு - 23-ம் தேதி இறுதி முடிவு வெளியாகுமென ராஜீவ் சுக்லா அறிவிப்பு
Oct 14 2019 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில், தலைவர், செயலாளர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வேட்புமனு தாக்கல் செய்தார். செயலாளர் பதவிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவின் மகன் திரு. ஜே ஷா போட்டியிடுகிறார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்குரின் சகோதரர் திரு. அருண் துமால், பி.சி.சி.ஐ பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தலைவர் பதவிக்கு, கங்குலியை தவிர யாரும் மனுதாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.