உலக சிலம்ப சாம்பியன் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் : தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

Sep 18 2019 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப சாம்பியன் போட்டியில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், மலேசி சிலம்பம் அகாடமி, ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில், உலக சிலம்பம் சாம்பியன் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 300 சிலம்பாட்ட வீரர்கள் பங்குபெற்றனர். நாகை மாவட்டம் சீர்காழி இளைய வீரத்தமிழர் சிலம்பாட்டகழகத்தைச் சேர்ந்த 8 பேர், இப்போட்டியில் கலந்துகொண்டு 11 பதக்கங்களுடன் 3வது இடம்பிடித்தனர். இந்நிலையில், தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்‍கு திருச்சி விமான நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனிடையே, சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி திடலில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. ஜூனியர், சூப்பர் சீனியர் பிரிவிற்கான போட்டியில் 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00