விராட் கோலியின் சோகக் கதையை கேட்டு உணர்ச்சி வசப்பட்ட அனுஷ்கா - இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ காட்சிகள்
Sep 14 2019 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி பெரோஷா கோட்லா மைதான கேலரிகளுக்கு அருண்ஜெட்லி மற்றும் விராட்கோலி பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்கா சர்மா, கணவர் கோலியின் தந்தை இறந்த சோகக்கதையை கேட்டு உணர்ச்சி வசப்பட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விராட்கோலி, இப்படி ஒரு விழாவில் தான் கவுரவிக்கப்படுவேன் என ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை எனக் கூறியதுடன், தனது மனைவி, சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தனது தந்தை இறந்த நாளில் கிரிக்கெட் விளையாடிய கோலியை, அருண்ஜெட்லி பாராட்டிய செய்தியைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட அனுஷ்கா, கோலியின் கைகளை பற்றி முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.