இந்தியாவுடான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சி
Sep 11 2019 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுடனான எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலா நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் மோதுகிறது. வரும் 15-ம் தேதி தர்மசாலா நகரில் முதல் 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 18-ம் தேதி மொகாலியிலும், 22 -ம் தேதி பெங்களூருவிலும், போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் 20 ஓவர் போட்டியில் பங்கேற்க, தென் ஆப்பிரிக்க அணி, இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா வந்தது. அங்குள்ள மைதானத்தில் அந்த அணி வீரர்கள், வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 ஓவர் கிரிக்கெட் தொடர் முடிந்ததும், முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2 ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி புனேவிலும், 3- வது போட்டி ராஞ்சியிலும் நடைபெறவுள்ளன.