இந்திய அணியில் அம்பத்தி ராயுடு போன்றவர்கள் தேர்வு செய்யப்படாதது வெட்கக்கேடானது - பி.சி.சி.ஐ தேர்வுக்குழுவுக்கு கவுதம் கம்பீர் கண்டனம்
Jul 4 2019 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணியில் அம்பத்தி ராயுடு போன்றவர்களுக்கு பி.சி.சி.ஐ தேர்வுக்குழு வாய்ப்பு வழங்காதது வெட்கக்கேடானது என முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதுதொடர்பாக பி.சி.சி.ஐ பொது மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அம்பத்தி ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். பி.சி.சி.ஐ தேர்வுக்குழுவின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ள அவர், அம்பத்தி ராயுடு போன்ற திறமைமிக்க வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது வெட்கக்கேடானது என குறிப்பிட்டார். உலகக்கோப்பையை வெற்றி கொள்வது முக்கியமானது தான், அதேசமயம் ராயுடு போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க மனம் வேண்டும் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவித்திருப்பது சரியான தருணமாக இருக்காது என ஐ.பி.எல். தலைவர் திரு.ராஜீவ் சுக்லா குறிப்பிட்டுள்ளார். அவர் இன்னும் பல போட்டிகளில் விளையாட வேண்டுமென தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.