இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவானுக்கு உலகக்கோப்பை போட்டியில் இருந்து ஓய்வு - காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை
Jun 11 2019 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், கடந்த 9-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 117 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் கவுல்டர் நைல் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது, தவானின் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவக்குழு, இந்த காயம் குணமாக 3 வாரங்கள் ஆகும் என்பதால், அதுவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியது. இதன் காரணமாக, உலகக்கோப்பை தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால், அதிலிருந்து தவான் விலகியுள்ளார். இந்திய அணிக்கு இது சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.