சேலத்தில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
Jan 21 2019 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2019 மாபெரும் ஆணழகன் போட்டி சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
போட்டியானது எடை அடிப்படையில் 55 கிலோ முதல் 90 கிலோ வரை 9 பிரிவுகளாகவும், உயரம் அடிப்படையில் இரு பிரிவுகளாகவும் நடைபெற்றது.
இதில் சேலம், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை திறன்பட வெளிபடுத்தினர். மேலும் போட்டியில் பங்கேற்ற இளைஞர்களின் கட்டுகோப்பான உடல் அமைப்பை கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசு தொகையும், வெற்றி கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.