திருச்சியில் கராத்தே வீரர் ஒரு நிமிடத்தில் 53 ஸ்பைடர்மேன் புஷ்-அப் செய்து சாதனை முயற்சி
Nov 7 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் கராத்தே வீரர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 53 ஸ்பைடர்மேன் புஷ்-அப் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
அமெரிக்க வீரர் லூயிஸ் வர்க்காஸ் என்பவரின் சாதனையை முறியடிக்கும் வகையில், திண்டுக்கல்லை சேர்ந்த கராத்தே ஆசிரியர் அப்துல் ரகுமான், திருச்சி பாலக்கரை பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில், ஒரு நிமிடத்தில் 53 ஸ்பைடர்மேன் புஷ்-அப்களை செய்தார். எனினும், நூலிழையில் அவர் உலக சாதனையை நழுவவிட்டார். இந்த சாதனை, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.