டென்மார்க் இறகுப்பந்து பயிற்சியாளர்கள் புதுச்சேரி வருகை : நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி
Aug 10 2018 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இறகுப்பந்து பயிற்சியாளர்கள் 5 பேர், புதுச்சேரி வீரர்களுக்கு பயிற்சியளித்தனர்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இறகுப்பந்து பயிற்சியாளர்கள் 5 பேர், புதுச்சேரி இறகுப் பந்து விளையாட்டு மையத்தில், இறகுப் பந்து விளையாடும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிப்பதற்காக புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள், இறகுப் பந்து விளையாடும் மாணவர்களுக்கு, அதன் நுட்பங்களை கற்றுக்கொடுத்தனர். நிகழ்ச்சியின் இறுதியில், பொன்னாடை போர்த்தி அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.