கரூரில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி : பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
Mar 12 2018 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில், மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. நேற்று காலை தொடங்கிய இப்போட்டிகளில், கரூர், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தொடு சிலம்பம், தனித்திறமை ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.