தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் அமர்வு கைப்பந்து போட்டி : நெல்லையைச் சேர்ந்த 3 வீரர்கள் தேர்வு
Feb 18 2018 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் அமர்வு கைப்பந்து போட்டியில் பங்கேற்க நெல்லையை சேர்ந்த மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் பாராலிம்பிக் அமர்வு கைப்பந்து போட்டி வருகிற 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், இந்திய அணி சார்பில், 14 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திரு. சுந்தர கணேசன், திரு. தவசிராஜன் மற்றும் திரு. பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இப்போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என திரு. சுந்தர கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.