ஹிமாச்சலப்பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு
Jan 22 2018 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவை பயன்படுத்தி, அங்கு நடத்தப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு களைகட்டி வருகிறது.
முழுவதும் மலைகளால் சூழப்பட்ட குளுகுளு பிரதேசமான ஹிமாச்சலப்பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனின்போது அங்கு உறைபனி மூலம் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டுக்கான மைதானங்கள் அமைக்கப்படும். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அங்குவரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இதில் ஸ்கேட்டிங் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர். தலைநகர் ஷிம்லாவில் உள்ள பனிச்சறுக்கு மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற விளையாட்டின்போது இதில் பங்கேற்ற பலரும் கைகளில் தீச்சுடர்களை ஏந்தியபடி ஸ்கேட்டிங் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.