நெல்லையில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
Apr 30 2017 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியாபுரத்தில், மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை சட்டமன்ற உறுப்பினர் திரு. இன்பதுரை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அணிகளும் நாக் அவுட் முறையில் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் பணகுடி அணியும், பழவூர் அணியும் மோதின. இதில் பணகுடி அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரியில் தென்னிந்திய சீனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் 5 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், ஆடவர் பிரிவில் தமிழக அணியும், மகளிர் பிரிவில் கர்நாடக அணியும் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.