கோவாவில் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டி : தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு
Oct 26 2016 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவருக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய அளவிலான ஊர்ப்புற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், குத்துச்சண்டை பிரிவில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் இன்ப சதீஸ்குமார் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி வீரராக சொந்த ஊர் திரும்பிய அவருக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இன்ப சதீஸ்குமாருக்கு கிடைத்துள்ளது.