திருச்சியில் தொடங்கியுள்ள அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டி : 500-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கணைகள் பங்கேற்பு
Aug 25 2016 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் தொடங்கியுள்ள அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கணைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத்தின் சார்பில் 82-வது தடகளப் போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், டிரிபிள் ஜம்ப், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்து காமன்வெல்த், ஆசிய, தேசிய, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்ற வீரர் - வீராங்கணைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.