விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில செஸ் போட்டி : திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் சாம்பியன் சட்டத்தை வென்றனர்
Jul 28 2016 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில செஸ் போட்டியில், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் சாம்பியன் சட்டத்தை வென்றனர்.
ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஜீனியர் செஸ் சாம்பியம் ஷிப் போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், கரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஜீனியர் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முத்தையன் என்ற மாணவர் 9-க்கு 7.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அதேபோல், மாணவிகள் பிரிவில் கோவையை சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி 9-க்கு 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.