கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி : ஆடவர் - மகளிர் இறுதியாட்டங்களில் சென்னை, சத்தீஸ்கர் அணிகள் வெற்றி
May 27 2016 7:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் இறுதியாட்டங்களில் சென்னை, சத்தீஸ்கர் அணிகள் வெற்றி பெற்றன.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. சென்னை, கேரளா, டெல்லி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதியாட்டத்தில், சென்னை ஐ.ஓ.பி அணியும், வருமான வரித்துறை அணியும் மோதின. இதில், 71-க்கு 37 என்ற புள்ளி கணக்கில், சென்னை ஐ.ஓ.பி. அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் சட்டீஸ்கர் பேஸ்கட் பால் அணியும், செகந்தராபாத் அணியும் விளையாடின. 11-க்கு 2 என்ற புள்ளி கணக்கில் சட்டீஸ்கர் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூரு ஹாக்கி அகாடமி அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது.
திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டியில், ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். போட்டியில், சிராசனம், வஜ்ராசனம், தனுராசனம், உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மேற்கொண்டு, மாணவ-மாணவிகள், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.