முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம விளையாட்டு போட்டிகள் தொடங்கின
Feb 5 2016 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள கொர்க்கை கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகளை நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இப்போட்டிகளை அமைச்சர் திரு. முக்கூர் என் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 18 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். இந்நிகச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஞானசேகரன் பங்கேற்றார். இப்போட்டிகளில் தடகளம், கைப்பந்து, கபாடி ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும் நடைபெறுகிறது.