காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையேயான உறவை வலுப்படுத்த பெரம்பலூரில் பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன
Feb 5 2016 6:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பெரம்பலூரில் பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. கைப்பந்து, கபடி, 100 மீட்டர், 200 மீட்டர், ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் போட்டிகள், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் குழுப் போட்டிகள் என பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. செந்தாமரை கண்ணன், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.