திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி : ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
Nov 28 2015 8:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 500-மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து - ஹாக்கி போட்டிகளில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 20 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.