ரியோடி ஜெனிரோ நகர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது இந்திய ஹாக்கி மகளிர் அணி - 35 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதிபெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
Aug 29 2015 7:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2016-ம் ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி, உலக அரங்கில் பல வெற்றிகளையும், சறுக்கல்களையும் சந்தித்துள்ளது. உலகிற்கே ஹாக்கி விளையாட்டை அறிமுகம் செய்து, சாம்பியனாக திகழ்ந்த இந்தியாவுக்கு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே கனவாகிப் போனது. இந்தியாவின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில், மகளிர் ஹாக்கி அணி, பிரசில் நாட்டில் 2016-ம் ஆண்டு, ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது ஹாக்கி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் நடைபெற்ற Euro ஹாக்கி சாம்பியன் ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியதன் மூலம், இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தென்கொரியா, ஆர்ஜென்டினா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் இந்திய அணியும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.