ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பைக்கான கடற்கரை கைப்பந்து போட்டி - முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று லத்விய வீரர்கள் சாதனை
Aug 4 2015 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பைக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில், முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று லத்விய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆஸ்திரியாவின் Klagenfurt நகரின் கடற்கரையில் ஐரோப்பிய கோப்பைக்கான கைப்பந்து போட்டி தொடங்கிது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற நால்வர் கைப்பந்து போட்டியில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற லத்வியா மற்றும் இத்தாலி இடையே பலப்பரிட்சை நடைபெற்றது. 2 அணிகளைச் சேர்ந்த வீரர்களும், ஆக்ரோஷமாக விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தபோட்டியில், 21-க்கு 18 என்ற புள்ளி கணக்கில் இத்தாலியை வென்று முதன்முறையாக, ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை லத்வியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.