ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் சேர்க்க பரிந்துரை - வாக்குப்பதிவு வரும் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
Jul 29 2015 9:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 206-வது நாடாக தெற்கு சூடான் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வாக்குப்பதிவு வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சர்வதேச ஒலிம்பிக் குழுவில், தெற்கு சூடானை புதிய உறுப்பினராக சேர்த்துக் கொள்வதற்கு, ஒலிம்பிக் நிர்வாக வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைக்கு ஒரு மனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வாக்குப் பதிவு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. தங்களின் இந்த நடவடிக்கை மூலம், உள் நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் தெற்கு சூடானில், பல்வேறு இன மக்களிடையே அமைதி திரும்ப வாய்ப்பு ஏற்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.