நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டி - வீரர்களின் ஆக்ரோஷமான விளையாட்டைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்
Jul 4 2015 8:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சீர்காழியில் தொடங்கியுள்ள மாநில அளவிலான கால்பந்து போட்டி, விளையாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சீர்காழி கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான மூன்று நாள் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில், சென்னை, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 27 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல்நாள் ஆட்டத்தில் சிதம்பரம் அணியும், விழுப்புரம் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆக்ரோஷமாக விளையாடிது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிதம்பரம் அணி வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் தரங்கம்பாடி அணியை எதிர்கொண்ட சீர்காழி அணி, 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாம் நாளான இன்றும் போட்டிகள் நடைபெறும் நிலையில், நாளை இறுதிப்போட்டியும், அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதேபோல், திருச்சி மாவட்ட இறகுப்பந்து சம்மேளனம் மற்றும் டெஸ்டினி பேட்மின்டன் அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான சப் ஜுனியர் இறகுப்பந்து விளையாட்டுப்போட்டி, திருச்சியில் நேற்று தொடங்கியது. மூன்றுநாள் தொடர்ந்து நடைபெறும் இந்தப்போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 10, 13 மற்றும் 15 வயத்துக்குட்பட்டோர் என மூன்றுப் பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இருபாலினத்தவரும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிபடுத்தியது, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி இன்றும் தொடர்கிறது. போட்டியின் நிறைவுநாளான நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்குப் பின்னர், அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.