டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிந்த ஆடுகளம் திருப்திகரமானதாக இல்லை : கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தரம் குறித்து ஐசிசி கருத்து
Jan 9 2024 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்த நிலையில், கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் திருப்திகரமாக இல்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்தது. குறிப்பாக 2-வது டெஸ்டானது 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாதபடி இரண்டே நாளில் முடிந்தது. இதனால் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தின் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்தநிலையில், ஆடுகளம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று ஐசிசியும் மதிப்பிட்டுள்ளது.