மன்னார்குடியில் மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகள் : பெண்களுக்கான போட்டியில் மன்னார்குடி செயின்ட் ஜோசப் அணி முதலிடம்
Jan 8 2024 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி, பொது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 180க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை நெடுவாக்கோட்டை ஆர்.வி அணியும், இரண்டாம் பரிசை நன்னிலம் பி.எஸ் பிட்னஸ் அணியும், மூன்றாம் பரிசை மன்னார்குடி ஆர்.ஆர்.பி. அணியும் தட்டி சென்றது. பெண்களுக்கான போட்டியில் மன்னார்குடி செயின்ட் ஜோசப் அணி முதல் பரிசை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.