நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பைக்கான அணி அறிவிப்பு : ஸ்வேதா செஹ்ராவத் தலைமையில் 14 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவிப்பு
Jun 2 2023 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பைக்கான 14 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 12ம் தேதி ஹாங்காங்கில் நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 8 அணிகளாக இப்போட்டியில் களமிறங்குகின்றன. இதில், ஆல்-ரவுண்டர் பேட்டிங் ஸ்வேதா செஹ்ராவத் கேப்டனாகவும், துணை கேப்டனாக சௌம்யா திவாரி, த்ரிஷா கோங்காடி, முஸ்கன் மாலிக், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா உள்ளிட்ட 14 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.