தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென், ஜார்ஜ் முன்னேற்றம்... 2வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வியடைந்து ஏமாற்றம்
Jun 2 2023 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென், கிரண் ஜார்ஜ் முன்னேறியுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்றுவரும் இத்தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் - சீனாவின் ஹாங் யாங் வெங்வை எதிர்கொண்டார். இப்போட்டியில், 21-11, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரரை எளிதில் வீழ்த்தி ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரர் லி ஷி பெங்கை 21-17, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
அதேநேரம் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹீ பிங் ஜியாவோவிடம் 11-21, 14-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.